Tuesday, July 29, 2014

குறுந்தொகை - 59




தோழி கூற்று
(தலைவன் பொருள்தேடச் சென்ற காலத்தில் அவனது பிரிவை தாங்காது வருந்திய தலைவியை நோக்கி, "தலைவர் உன்னை மறவார்; தமக்கு வேண்டிய பொருளைப் பெற்று விரைவில் திரும்புவார்" என்று தோழி கூறியது.)

பாலைத்திணை - பாடலாசிரியர் மோசிகீரன்


இனி பாடல்-
 
பதலைப் பாணிப் பரிசிலர் கோமான்
   
அரலைக் குன்றத் தகல்வாய்க் குண்டுசுனைக்
   
குவளையொடு பொதிந்த குளவி நாறுநின்
   
நறுநுதன் மறப்பரோ மற்றே முயலவும்
5
சுரம்பல விலங்கிய வரும்பொருள்
   
நிரம்பா வாகலி னீடலோ வின்றே.

                     - மோசிகீரன்

உரை-

 கண்மாக்கிணையை இயக்கும் தாளத்தையுடைய பறை . பாணர் முதலிய இரவலரைப் பாதுகாக்கவனது அரலையென்னும் குன்றத்தின்கண் உள்ள அகன்றவாயையுடைய ஆழமுள்ள சுனையினிடத்து மலர்ந்த குவளை காட்டுமல்லிகையின் மணம் வீசும் உனது நல்ல நெற்றியை தலைவர் மறப்பாரோ?பலநாள் நின்று முயற்சிகளைச் செய்தாலும் பாலைநிலம் பல குறுக்கிட்ட கிடைத்தற்கரிய பொருள் முற்றக் கை கூடாவாதலின் முற்றும் பெற்றே மீள்வே மென்று கருதித் தலைவர் காலம் நீடித்து தங்குதல் இலதாகும்.ஆகவே நீ வருத்தப்படாதே!

    (கருத்து) தலைவர் விரைவில் மீளுவர்.

 

    (வி-ரை.) பதலை - ஒருகண் மாக்கிணையென்னும் பறை. பரிசிலர் கோமானென்றது பரிசிலருக்குப் பரிசில் தந்து பாதுகாக்கும் தலைவன்.

No comments: