Thursday, December 4, 2014

குறுந்தொகை-168



தலைவன் கூற்று

(பொருள் தேடத் துணிந்த நெஞ்சை நோக்கி, “தலைவியைப் பிரியின் உயிர்வாழ்தல் அரிது” என்று தலைவன் கூறியது.)

மருதம் திணை- பாடலாசிரியர் சிறைக்குடியாந்தையார்

இனி பாடல்-


மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை
 
இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து
 
பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன
 
நறுந்தண் ணியளே நன்மா மேனி

புனற்புணை யன்ன சாயிறைப் பணைத்தோள்
 

மணத்தலுந் தணத்தலு மிலமே
 
பிரியின் வாழ்த லதனினு மிலமே.

என்பது பொருள்வலிக்கும் நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது.

 
                                                -சிறைக்குடி யாந்தையார்.


உரை-

நெஞ்சே, தலைவி, நல்ல மாமையையுடைய மேனி,  மாரிக்காலத்தில் மலரும் பிச்சியினது,  நீர் ஒழுகும்கொழுவிய அரும்புகளில்,  பெரிய பசிய பனங் குடையில்,பலவற்றை ஒருங்கே வைத்து மூடி,  பெருமழை பெய்தலையுடைய விடியற் காலத்தே, விரித்துவிட்டாற் போன்ற,  நறுமையையும் தண்மையையும் உடையவள்; நீரில் விடும் தெப்பத்தைப் போன்ற,  வளைந்த சந்தினையுடைய பருத்த அவள் தோள்களை, பொருந்துதலும், பிரிதலும், இலம் . பிரிவேமாயின்,  உயிர் வாழ்தல், அதனைக் காட்டிலும், இல்லேம்.

 
    (கருத்து) தலைவியைப் பிரிதல் அரிது.

No comments: