Friday, December 19, 2014

குறுந்தொகை-177



(தலைவன் மாலைக்காலத்தில் வருவானென்று தோழி தலைவிக்குக்கூறியது.)

நெய்தல் திணை - பாடலாசிரியர் உலோச்சன்

இனி பாடல்-

கடல்பா டவிந்து கானன் மயங்கித்
   
துறைநீ ரிருங்கழி புல்லென் றன்றே
   
மன்றவம் பெண்ணை மடல்சேர் வாழ்க்கை
   
அன்றிலும் பையென நரலு மின்றவர்

வருவர்கொல் வாழி தோழி நாந்தப்
   
புலப்பினும் பிரிவாங் கஞ்சித்
   
தணப்பருங் காமந் தண்டி யோரே.


                        -உலோச்சன்

உரை-

   தோழி , கடலானதுஒலி அடங்க, கடற்கரைச் சோலை மயக்கத்தையுடையதாக,  துறையையும் நீரையும் உடைய கரிய கழி,  பூக்கள் கூம்பியதனால் பொலிவழிந்தது; மன்றத்தின் கண் உள்ள அழகிய பனைமரத்தினது, மடலின் கண்ணே பொருந்திய வாழ்க்கையையுடைய,  அன்றிற் பறவையும், மெல்ல,  கூவும்; முன்புநாம் தம்மைப் புலந்தாலும்,  அவ்விடத்துப் பிரிதலை அஞ்சி,  நீங்குதற்கரிய காம இன்பத்தை,  அலைத்தும்பெற்றவராகிய, தலைவர், இன்று வருவர்.



    (கருத்து) தலைவர் இன்று வருவர்.

No comments: