Sunday, December 7, 2014

குறுந்தொகை-171



தலைவி கூற்று
(தலைவன் மணமுடிக்க பொருளீட்டப் பிரிந்த காலத்தில் அயலாரை மணமுடிக்க எட்க்கும் முயற்சி முயற்சி பயன்படாதொழியும்” எனத் தலைவி கூறியது.)

மருதம் திணை- பாடலாசிரியர்  பூங்கணுத்திரையார்

இனி பாடல்-

காணினி வாழி தோழி யாணர்க்
   
கடும்புன லடைகரை நெடுங்கயத் திட்ட
   
மீன்வலை மாப்பட் டாஅங்
   
கிதுமற் றெவனோ நொதுமலர் தலையே.


                          -பூங்கணுத்திரையார்

உரை-

    (ப-ரை.) தோழி- இப்பொழுது பார்ப்பாயாக;  புதுவரவாகிய,  மிக்க புனலையும்,  அடைந்த கரையையுமுடைய, ஆழமான குளத்தின்கண் அமைத்த,  மீனுக்குரிய வலையின்கண், விலங்கு அகப்பட்டாற் போல,  அயலாரிடத்து,  வரைவுக்குரிய மணமுடிக்கும் இம் முயற்சி,என்ன பயனுடைத்து?

 

    (கருத்து) அயலார் மணந்து கொள்வதால் பயனொன்று மில்லை.

No comments: