Monday, December 22, 2014

வறுமையும்...பட்ட காலிலேயே படுதலும்.. (கொஞ்சி விளையாடும் தமிழ்)


சனிப் பெயர்ச்சி.
உன் ராசிக்கு முதல் சனி..இரண்டரை வருஷம்.உடம்பு படித்தும்...பண நஷ்டம் ஏற்படும்.
அவன் ராசிக்கு மத்திய சனி..பரவாயில்லை.சமாளிக்கும் அளவு துன்பங்கள் இருக்கும்.
இவனுக்கோ...பொங்குசனி..அப்படியே வீட்டில் செல்வம் பொங்கும் என்றெல்லாம்..
சனிப் பெயர்ச்சியின் போது சொல்லுவர்.
ஆனால் இப்பதிவு அதுஅல்ல.

வறுமைக் குறித்து.

ஒருவருக்கும் துன்பம் ஏற்பட்டால்..அவருக்கு தொடர்ந்து துன்பங்கள் வந்து கொண்டே இருக்கும்.பட்ட காலிலேயே படும் என்பது ஒரு சொல வடை,.

அப்படி ஒருவருக்கு துன்பம் வருகிறாம்.

இராமச்சந்திர கவிராயர் என்னும் கவி ஒருவர் ஒருவனுக்கு அடுக்கடுக்காய் வரும் துன்பத்தை...அந்த அவலத்தை சற்று நகைச்சுவையுடன் கூறும் பாடலைக் கேளுங்கள்.

"ஆவீன மழைபொழிய இல்லம் வீழ

அகத்தடியார் மெய்நோக அடிமை சாக

,மாவீரம் போகுதென்று விதைகொண் டோட

வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ள

சாவோலை கொண்டொருவன் எதிரே தோன்ற

தள்ளொண்ணா விருந்துவர சர்ப்பம் தீண்ட

கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்க

குருக்கள்வந்து தட்சணைதான் கொடு என்றாரே"


அவன் வீடு வயல் வெளி சூழ்ந்த பண்ணை வீடாம்.அவன் வீட்டில் பசு ஒன்று கன்றை ஈன்ற போது கொட்டித் தீர்த்தது மழை.அந்த மழையில்..அவன் வீடு இடிந்து விழுகிறது.வீட்டினுள் சென்று பார்த்தால், மனைவி படுகாயப்பட்டுள்ளாள்.அவன் அவளை மீட்க உதவிக்கு வேலைக்காரனைக் கூப்பிடுகிறான்.ஆனால் அவனோ வீட்டு இடிபாடுகளில் சிக்கி பிணமாகியுள்ளான்.அவனுக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை.அப்போது ஞாபகம் வருகிறது..மழையால் மண் ஈரமாய் இருக்கும் போதே விதைநெல்லைத் தெளித்துவிட்டால்..வரும் காலம் வயிற்றுப்பாட்டிற்கு கவலை இல்லை.ஆகவே விதை நெல்லை தெளிக்க ஓடுகிறான்.(மனைவியை யாரையாவது பின் உடன் அழைத்து வந்து காப்பாற்றலாம் என்ற எண்ணம் வேறு)..ஆனால் செல்லும் வழியிலேயே, இவனுக்குக் கடன் கொடுத்தவன் எடுத்துச் சென்ற விதை நெல்லைக் கடனுக்கு பதில் பிடுங்கிச் செல்ல,அந்த வேளையில், பக்கத்து ஊரில் நெருங்கிய சொந்தம் இறந்து விட்டான் என்ற சாவு செய்தியை ஒருவன் கொண்டு வர..அப்போது..அவன் எப்போதோ அழித்திருந்த விருந்தினர் கூட்டம் வர..அச்சமயம் அவன் காலை ஒரு பாம்பு கொத்த..அதனால் அவன் கண்கள் இருள..அச்சமயம், அரசன் அவன் வரி செலுத்தவில்லை என அதை வசூல் செய்ய ஆளை அனுப்ப, அதே சமயம் வரி கொடுக்கும் போதே..கோவில் குருக்கள் அவன் தர வேண்டிய தட்சணை பாக்கியையும் கேட்க..கண் மூடுகிறான் அவன்.

(இப்படியெல்லாம் நடக்குமா? என்று வினவாமல் பாடலை மட்டும் ரசிக்கவும்)

No comments: