Wednesday, December 24, 2014

இயக்குநர் சிகரமே..போய் வா..

                                   

தமிழ்த் திரையுலகில், எம்.ஜி.ஆர்., படம்., சிவாஜி படம்., என நடிகர்கள் பெயரைச் சொல்லி படங்கள் வந்த காலகட்டத்தில் முதன் முதலாக இது ஸ்ரீதர் இயக்கிய படம்,என்றும் இது பாலசந்தர் இயக்கிய படம் என்றும் ரசிகர்களைச் சொல்ல வைத்த வர்கள் ஸ்ரீதரும், பாலசந்தரும்.

பாலசந்தர் படங்களில் நடித்த கதாபாத்திரங்களின் பெயர்களையும் ரசிகர்கள் மறக்க முடியாவண்ணம் பாத்திரப் படைப்புகள் அமைக்கப்பட்டது பாலசந்தரின் வலிமையாகும்.

அரங்கேற்றம் லலிதா, அவள் ஒரு தொடர்கதை கவிதா, தாமரை நெஞ்சம் கமலா, எதிர் நீச்சல் மாது, நீர்க்குமிழி சேது,புதுப் புது அர்த்தங்கள் மணிபாரதி, என்றுஇப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு மாதிரி....வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்டவை.

தமிழ்த்திரையுலகின் இயக்குநர் சிகரம் ...

நாடக உலகிலிருந்து திரைக்கு வந்தவர்..ஆனாலும் கடைசி வரை நாடக மேடையை மறக்காதவர்.

எம்.ஜி.ஆரின் தெய்வத்தாய் மூலம் கதை வசனகர்த்தாவாக அறிமுகமான இவர், சிவாஜி நடித்த நீலவானம் படத்திற்கும் கதை வசனம் எழுதினார்.பிறகு நடிகர் திலகம் நடிக்க எதிரொலி என்ற படத்தை இயக்கினார்.

நீர்க்குமிழி மூலம் இயக்குநர் ஆனவர் இவர்.முதல்படமே இப்படி பெயர் உள்ளதே என்ற போது..அதிலெல்லாம் நம்பிக்கை இல்லை என்று சொன்ன பகுத்தறிவாளர் இவர்.

இவர் இயக்கத்தில் வெற்றி பெற்ற படங்கள்..

நீர்க்குமிழி, தாமரை நெஞ்சம், அரங்கேற்றம், அபூர்வ ராகங்கள், அவள் ஒரு தொடர் கதை, மன்மத லீலை, அவர்கள், புன்னகை, சிந்து பைரவி,மூன்று முடிச்சு,உன்னால் முடியும் தம்பி,தப்புத் தாளங்கள், அச்சமில்லை அச்சமில்லை, வறுமையின் நிறம் சிவப்பு,இரு கோடுகள், தண்ணீர் தண்ணீர் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.ஏக் துஜே கேலியே ஹிந்தியும், மரோசரித்ரா தெலுங்கும் வரலாற்று புகழ் பெற்றவை.

அவர் இழப்பு தமிழ்த் திரையுலகில் ஈடு செய்ய முடியா இழப்பு.

இயக்குநர் சிகரமே! போய் வா...சினிமா உள்ளவரை உன் பெயர் இருக்கும்.

தமிழ் நாடகம் உள்ளவரை உன் பெயர் அதில் நிலைத்திருக்கும்.

சுகமாய்ப் போய் வா.என கண்ணீர் பெருக உன்னை அனுப்பி வைக்கிறோம்

No comments: