Monday, February 3, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 31


நமது சங்க கால பாடல்கள் பலவற்றில் தலைவன் பொருளீட்ட சென்றுள்ளான்..என தலைவி,தோழியிடம் உரைப்பதைப் படித்துள்ளோம்.

திருக்குறளில், அதுவும், கட்டளை இடுவது போல்.பொருளீட்டுவதைப் பற்றி சொல்லியுள்ளார் வள்ளுவர் 

"பணம் சம்பாதியுங்கள், உங்கள் பகைவர்களின் செருக்கை அறுக்க அதை விட கூரிய பொருள் இல்லை" என்கிறார் வள்ளுவர்.

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃதனிற் கூரிய தில் (759)



பொருளீட்டுங்கள்.எதிரிகளின் இறுமாப்பை அறுக்கும் ஆயுதம் அதைவிட கூரியது எதுவும் இல்லை



எதிரிகளின் மமதை என்பது ஒரு பொருள் இல்லை, எனவே அதை எந்த ஆயுதத்தாலும் உடைக்க முடியாது.

நாம் நிறைய பொருள் சேர்த்தால், அது அவர்களின் இறுமாப்பை உடைக்கும்.

எனவே, பொருள் சேருங்கள்.

உங்களை பிடிக்காதவர்களின் வாயை அடையுங்கள்

No comments: