Monday, February 17, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 48


விருந்து ஓம்புதல் ஒரு அறம் எனப் பார்த்தோம்  முன்னர்;

விருந்தினர்களை உபசரிப்பது என்பது அறத்தின் ஒரு கூறு என்று கூறிகிறது தமிழ் கலாச்சாரம்.

விருந்தினர்களை எப்படி உபசரிக்க வேண்டும் என்கிறது இந்த குறள்

முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினிதே அறம் (93)

முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூருதலே அறவழியில் அமைந்த பண்பாகும்.

இனியவை கூறல் என்னும் அதிகாரத்தில் சொல்கிறார்
எது இனிய சொல்? என்று...

வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனை அற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதே இன்சொல் என்கிறார்.

 சரி..அகம் மலர என்றால்...அதற்கும் சொல்கிறார்..

வருபவர்களை முகம் மலர நோக்கி இனிய சொற்க்ளைக் கூறினால் அகம் மலரும் சொற்களாக அது அமையுமாம்.அதும் அறவழிப் பண்பாகும்.

விருந்தினர்களைக் கண்டவுடன் கண்ணில் மகிழ்ச்சியைக் காட்ட வேண்டும்.பின் அவர்கள் வீட்டினுள் வந்ததும் இனிய சொற்களைக் கூறவேண்டுமாம்.

சொல்ல இனிய சொற்கள் இருக்கையில், அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது உண்ண கனிகள் இருக்கும்போது காய்களைப் பறித்துத் திபதற்குச் சமமாகுமாம்..

.




No comments: