Sunday, February 23, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 58

நட்பின் சிறப்பு

-------------------

இந்தக் கேள்வியைக் கேட்டதுமே..நம் பதில்..

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு (788)

என்பதாகவே இருக்கும்.

ந்ண்பனை தீயவழி சென்றுவிடாது தடுப்பதும், நல் வழிப்படுத்துவம்..தீங்கின் துன்பத்திலிருந்து அவனை விடுவிப்பதும்கூட நட்பு எனலாம்.

நண்பனுக்கு வாழ்வில் வரும் சிக்கல்கள் வரும்.அதற்கு விடிவு என்ன என்று குழம்புவான்.அப்போது யார் நண்பன்..,யார் பகைவன் எனத் தெரியாது குழம்புவான். 


அந்த மாதிரி சமயங்களில், விரைந்து சென்று, அவர்களின் தளர்ச்சியை நீக்கி, அவர்கள் மீண்டும் நிலையான ஒரு வாழ்வைப் பெற உதவ வேண்டும்.

அதுதான் நட்பிற்கு இலக்கணம்

இதைத்தான் வள்ளுவர்

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றி
ஒல்லும்வாய்  ஊன்றும் நிலை (789)

என்கிறார்.

மனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவதே நட்பின் சிறப்பாகும்,

மேலும் ஒரு குறளில் சொல்கிறார்

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு (784)

நட்பு என்பது சிரித்து மகிழ்வதற்காக அல்ல.நன்பர்கள் நல்வழி தவறிச் செல்லும்பொழுது இடித்துரைத்துத் திருத்துவதற்காகும்


No comments: