Friday, February 21, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 55


பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்..எனும் அறிவுரையை நாம் அவ்வப்போது கேட்டிருக்கிறோம்.

ஆனால், அப்படி நன்மை செய்வது கூடத் தவறாம்.

அதெப்படி நல்லது செய்வது தவறாக முடியும் ?

பல வீடுகளில் ஓருரு குழந்தைகள் என்று இருப்பதால்...இன்றைய பெற்றோர் அவர்களுக்கு அதிகப்படியான செல்லம் கொடுக்கின்றனர்.கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுக்கின்றனர். குழந்தைகளும்..இப்போதெல்லாம் விளையாட வெளியே செல்வதில்லை.சதாசர்வ காலமும் கையில் மொபைல் ஃபோனுடன் திரிகின்றனர்.

இந்த அதிகப்படியான செல்லம்..குழ்ந்தைகளின் பிற்காலத்தில் தவறாகக் கூடப் போய் முடியும்.

இது மட்டுமல்ல..

நம் கடமையைச் செய்கிறோம் என..தேர்தலில் தவறான நபரைத் தேர்ந்தெடுக்கிறோம்.

அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு தரா தரம் பார்க்காமல் உதவி செய்வது பின்னாளில் துன்பத்தில் கொண்டு போய் முடியும்.

நல்லவன் என்று நினைத்து ஒட்டுப் போட்டு , தவறான தலைவர்களை தேர்ந்தெடுத்து  கஷ்டப் படுபவர்களுக்கு உண்டு.

ஓட்டு போடுவது தவறா என்றால் இல்லை. யாருக்கு போடுவது என்பதில் தான் சிக்கல்.

நன்மையை, திருந்த மனமில்லா கெட்டவன் ஒருவனுக்கு போதிப்பதால் பயன் ஏதுமில்லை.சிலசமயங்களில் அப்போதனைகளை வைத்து அவன் நம்மையேத் தாக்கக் கூடும்


நல்லது செய்வதிலும் தவறு உண்டு, யாருக்கு செய்கிறோம் என்று அறிந்து செய்யாவிட்டால் என்கிறார் வள்ளுவர்

நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை (469).

ஒருவரின் இயல்பைப் புரிந்து கொண்டுதான் நன்மையைக் கூடச் செய்ய வேண்டும், இல்லாவிட்டால் அதுவே தீமையாகத் திருப்பித் தாக்கும்


"பாத்திரமறிந்து பிச்சையிடு" என்ற பழமொழியும் உண்டு.
பொருள்


ஆகவே நல்லதுதானே செய்கிறோம் என்று கண்ணை மூடிக் கொண்டு செய்யாதீர்கள். 

நல்லாற்றல் உள்ளும் தவறு உண்டு ....

மேலும் சில குறள்களும் அவை சொல்லும் பொருளும்..

செய்தக்க அலல் செயக்கெடுஞ் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும் (466)

செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்..செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும்

நன்கு சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்.இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு.

எண்ணித் துணிக கருமந் துணிந்தபின்
எண்ணுவ மென்ப திழுக்கு (467). 

No comments: