Saturday, February 8, 2020

செவிக்கு உணவு நம் தமிழ் - 2

மரங்கள் பற்றியும், அவற்றின் பயன்கள் குறித்தும் ஒருவர் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் நாம் இல்லை.

மரத்திற்கும் உயிர் உண்டு.அவை நம் உறவுபோல என்று நற்றிணைப் பாடல் ஒன்று சொல்வதைக் காண்போம்.

தலைவன், தலைவி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.இருவரும் ஓடி ஆடி களைப்பு மிகுதியால் ஒரு புன்னை மரத்தடிக்கு வருகிறார்கள்.

அப்போது அவன், அவளிடம் முத்தம் ஒன்று கேட்கிறான்.அவள் சொல்கிறாள்

.


அவள் சொல்கிறாள்



விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ்முளை அகைய,
'நெய் பெய் தீம்பால் பெய்துஇனிது வளர்ப்ப
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும்' என்று
அன்னை கூறினாள்,புன்னையது நலனே-

அம்ம! நாணுதும் நும்மோடு நகையே,
விருந்தின் பணர் விளர் இசை கடுப்ப,
வலம்புரி வாங்கோடு நரலும் இலங்கு நீர்த்
துறை கெழு கொண்க! நீ நல்கின்
இறைபடு நீழல் பிறவுமார் உளவே

(விதையை) என்னோடு விளையாடும் தோழிகளோடு, வெள்ளை மணலில் அழுத்தி மறந்து விட்டோம்..துறந்தும் விட்டோம்.விதை முளைவிட்டு, கிளை விட்டு பெரிதாகி, நெய் ஊற்றி, சுவையான பால் இட்டு..சிறப்பாக வளர்ந்து வரும் போது..உன்னைவிட சிறந்தவள்
,உன் தமக்கை ஆகும் என்று  அந்த புன்னை மரத்து சிறப்பை புனைந்துரைத்தாள் அம்மா.உன்னோடு சிரித்து மகிழ்ந்து இங்கே இருப்பது எனக்கு வெட்கமாய் இருக்கிறது..விருந்தாக வந்த பாணன்மெல்லிய இனிய இசை போல வலம்புரி சங்கு இசைக்கும் வானம் போல வெளுத்த  நீரை உடைய நிலத்தின் தலைவனே அறிந்து கொள்.!

நீ சம்மதித்தால், நாம் இன்புற நிறைந்த நிழல் தரும் மரங்கள் இங்கு நிறையவே இருக்கின்றன..(அங்கு செல்வோம்..என் கிறாள்)

(புன்னை மரத்தை தங்கையாய் நினைக்கிறாள் இப்பெண்) 




No comments: