Wednesday, February 19, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 53

உலகம் உங்கள் கைகளில்


எவ்வளவு பெரிய கடினமான காரியமாக இருந்தால் கூட சாதிக்க வள்ளுவர் ஒரு வழி சொல்லித் தருகிறார்.

மூன்று விடயங்களை கைக் கொண்டால் எந்த பெரிய காரியத்தையும் செய்து விடலாம்.

அது என்ன மூன்று ?

ஒன்று - காலம்
இரண்டாவது - இடம்
மூன்றாவது - செயல்

ஞாலங் கருதினுங் கைகூடிங் காலம்
கருதி இடத்தாற் செயின் (483)

உரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால் உலகமே கூடக் கைக்குள் வந்துவிடும்



மேலோட்டமாக பார்த்தால் இடமும் காலமும் அறிந்து செய்தால் எந்த காரியத்திலும் வெற்றி பெறலாம் என்பது கருத்து.

சற்றே ஆழ்ந்து சிந்திப்போம்.

உலகை வெல்வது முடியுமா? ஆனால் இடமும், காலமும் அறிந்து செய்தால் அது கூட முடியுமாம்" கருதினும்..என "உம்"மை ஏன் போடுகிறார் எனப் புரிகிறதா?

அதுவும் முடியும் என்றாள் மற்ற முடியாத காரியங்கள் எல்லாம் முடியும் என்றுதானேப் பொருள்.

என்னே ஒரு சிந்தனை. 

அடுத்த குறளிலேயே சொல்கிறார் பாருங்கள்..

காலங் கருதி இருப்பர் கலங்காது
ஞாலங் கருது பவர் (485)

கலக்கத்துக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்துப் பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று காட்டுவார்கள்.

இதிலிருந்து..ஒரு செயலை செய்து முடிக்க அதற்கான உரிய காலத்தையும் இடத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாத காரியங்களையும் முடிக்கலாம் என்று உணர வேண்டும்.

சிந்திந்து செயல்படுவோமாக!


.


No comments: