Tuesday, February 18, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 49


பலரும் வெறுக்கும்படியான பயனில்லா சொற்களைப் பேசுபவர்களை அனைவரும் இகழ்ந்துரைப்பார்கள்.

பயனில்லா சொற்களை கூறுவது எதிரிகள் நமக்கு செய்யும் செயல்களைக் காட்டிலும் தீமையுடையதாகும்.

ஆகவே நல்ல வார்த்தைகளை கூற வேண்டும்.நல்லதே வேண்டும் என செயல்பட வேண்டும்.

நன்மை பல சமயங்களில் எட்டாக்கனியாகி விடுகிறது..

சில நண்பர்கள்   பயனில்லா சொற்களைப் பேசும் போது..அவர்களைக் கண்டதுமே.."ஐயய்யோ..இவன் வெட்டிக்கு பேசிக் கொண்டிருப்பானே" என்ற பயம் நமக்கு எற்படும் இல்லையா?

இப்படி, பயனில்லாத, பண்பில்லாத சொற்களை பேசுவதன் மூலம் ஒருவனைவிட்டு நன்மைகள் நீங்கிவிடுமாம்.

இதையே..

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து (194)

என்கிறார்.

இதன் பொருள்...பயனற்றதும், பண்பற்றதுமானசொற்களைப் பலர்முன் சொல்லுதல்..(இல்லை..பகிர்ந்து கொல்ளுதல்) மகிழ்ச்சியினைக் குலைத்து, நன்மையை மாய்க்கும்.

ஆகவே, நல்ல பண்புடையார், பயனில்லாத சொற்களைக் கூறினால் அவர் மதிப்பு நீங்கிவிடும்.

பயனில்லாதவற்றை சொல்பவன் பதர் போன்றவன். நாமும் பயனளிக்காத சொற்களை விடுத்து, மனதில் பதிந்து பயனளிக்கக் கூடிய பயனுள்ள சொற்களையே கூற வேண்டும்.



No comments: