Tuesday, February 25, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 60



வாழ்வில் வெற்றி பெற  எளிமையான வழி என்னவென்று தெரியுமா?

வள்ளுவர் சொல்கிறார்..

ஒண்ணு சொல் புத்தி இருக்க வேண்டும். அல்லது சுய புத்தி இருக்க வேண்டும்.

தனக்காக தெரிய வேண்டும்.  இல்லை என்றால் தெரிந்தவர்கள் சொல்வதை கேட்டு அதன் படி நடக்க வேண்டும்.

ஏவவுஞ் செய்கலான் தாந்தேறான் அவ்வுயிர்
போஒம் அள்வுமோர் நோய் (848)

சொந்தப் புத்தியும் இல்லாமல், சொல் புத்தியும் கேட்காதவர்க்கு அதுவே அவர் வாழ்நாள் முழுதும் அவரை விட்டு நீங்காத நோயாகும்.

அறிவு பஞ்சமே மிகக் கொடுமையான பஞ்சமாம்.மற்ர பஞ்சங்களைக்கூட உலகு அவ்வளவாகப் பொருட்படுத்தாதாம்.

மொத்தத்தில்

நோய் யாரிடம் இருக்கிறதோ அவர்களை மட்டும் வருத்தாது. ஒருவரிடம் இருந்து  மற்றவர்களுக்கு பரவி அவர்களையும் வருத்தும். அது போல சொல் புத்தி, சுய புத்தி இரண்டும் இல்லாதவர்கள் தங்களுக்கு மட்டும் அல்ல, மற்றவர்களுக்கும் துன்பம் விளைவிப்பார்கள் என்கிறார் பொய்யாமொழியார்.


முதலில் மற்றவர்கள் சொல்வதை கேட்டு செயல் பட வேண்டும். நாளடைவில் நமக்கே சொந்த அறிவு வர வேண்டும். எனவேதான் முதலில் சொல் புத்தியையும் பின் சுய புத்தியையும் சொன்னார் வள்ளுவர்.

No comments: