Sunday, February 9, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 38

இல்வாழ்வானின் ஐந்து கடமைகளை சென்ற பதிவில் பார்த்தோம்.

அதைத் தவிர அவ்னுக்கு மேலும் ஆறு கடமைகள் உள்ளதாக வள்ளுவர் கூறுகிறார்.

அவற்றை என்ன என்று பார்ப்போம்.

பெற்றோர், வாழ்க்கைத் துணை,குழந்தைகள் என இயற்கையாய் அமைந்திடும் மூவருக்கும்..எக்காலத்தும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்.

இதையே

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை (41)

என்கிறார்.

அடுத்து கடமைகள்..

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை (42)

என்கிறார்.

 பற்றற்ற துறவிகட்கும், பசியால் வாடுவோர்க்கும்,பாதுகாப்பற்றவர்க்கும் இல்லற வாழ்வு நடத்துவோர் துணையாக இருத்தல் வேண்டும்.

ஆக மொத்தம் இல்வாழ்வாழ்வானின் கடமைகள் பதினொன்றாகும்.

No comments: