Tuesday, February 4, 2020

மண்ணுக்குள்
மண்ணாய்
மக்கச் செய்யும்
மண்தானே
சிறு விதையையும்
பிரசவித்து
மண்ணில்
மக்களுக்காக
அனுப்புகிறது

எனக்குள்
விதைக்கப்பட்ட
தமிழ் வித்து
வளர்ந்து 
ஆலமரமாய்
ஆயிரம் கவிதை
கதை
நாடகம் எனும்
விழுதுகளுடன்
என்னைத் தாங்கி
வளர்த்து
வருகிறது....
அப்போது
என்னுடல்
உடலில் ஓடும் குருதி
உயிர் அனைத்தும் 
தமிழன்றோ!

No comments: