Wednesday, February 26, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 63

கற்க கசடற

எல்லோருக்கும் தெரிந்த குறள்தான் . 

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக  (391)



கற்க வேண்டியவற்றை பிழையின்றி கற்று, கற்ற பின் அதற்கு தகுந்த மாதிரி நடந்து கொள்ள வேண்டும்.

சற்று ஆழ்ந்து சிந்திப்போமா?

கற்க கசடற....உயர்ந்த நூல்களைப் படித்து, மனம்வாக்கு,செயல் ஆகியவற்றில் உள்ள கசடுகளை (மாசுக்களை)போக்க வேண்டும்.

அப்படி, படித்தும் மன மாசு போகவில்லையெனில், கற்றதனால் என்ன பயன்?

அதனால்...கற்றதற்கு ஏற்றாற்போல பண்புள்ளவனாக நடந்து கொள்ள வேண்டும்.

அப்படி மாசு அகல கற்றபின், நாம் வாழ்நாளில் அதன்படி நடந்திட வேண்டும்.
வாக்கில் இனிமை வேண்டும்.

செயல் சிறந்ததாக இருக்க வேண்டும்.

மனம் தூயதாக இருக்க வேண்டும்.

சரி, படித்தது போதும் என நிறுத்தி விடலாமா? எவ்வளவு படித்தாலும் கற்றது கைம்மண் அளவு அல்லவா?அதனால் படிப்புக்கு இவ்வளவுதான் என்ற எல்லை இல்லை

தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும் என்றும் கூறுகிறார்,

தொட்டனைத் தூறு மணற்கேனி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு (396)

நல்ல நூல்களைப் படித்து அறிவைப் பெருக்கிக் கொள்வோமாக!



.

No comments: